தமிழகம் மீண்டும் 'பரபர'- அக்.25-ல் ஜெ. மரண விசாரணை தொடக்கம்; 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் 25-ந் தேதி பரபரப்பை ஏற்படுத்த காத்திருக்கிறது. அக்.25-ல் ஜெயலலிதா மர்ம மரண விசாரணை தொடங்குகிறது; அதேபோல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
சென்னை: தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியல் களமும் மீண்டும் பரபரக்க போகிறது. வரும் அக்டோபர் 25-ந்தேதியன்று ஜெயலலிதா மர்ம மரண விசாரணை சென்னையில் தொடங்க உள்ளது. டெல்லி சிபிஐ நீதிமன்றமோ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தீர்ப்பு தேதி வழங்கப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி விசாரித்து வரும் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 25-ந் தேதியன்று தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் நீதிபதி ஷைனி கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

ஜெ. மர்ம மரண விசாரணை
நீதிபதி ஷைனி அக்.25-ல் தெரிவிக்கப் போகும் தீர்ப்பு தேதி இந்திய அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கும். அதேபோல மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பான விசாரணையும் வரும் 25-ந் தேதி தொடங்க இருக்கிறது.

ஜெ. கட்சியே அமைத்த விசாரணை கமிஷன்
ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அவரது ஆளும் கட்சியே விசாரணை கமிஷன் அமைத்திருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கிறது.

புதன்கிழமை முதல் விசாரணை
இந்த விசாரணை கமிஷனுக்கு சென்னை எழிலகத்தில் அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த அறை அமைக்கும் பணிகள் திங்களன்று முடிவடைகிறது.

யாரெல்லாம் விசாரிக்கப்படுவர்?
இதையடுத்து 25-ந் தேதியன்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையை தொடங்க உள்ளது. இந்த விசாரணை எப்படி அமையும்; யாரெல்லாம் விசாரிக்கப்படுவார்கள் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications