சென்னையில் பட்டப்பகலில் 3 கிலோ தங்கம் அபேஸ்.. நகை பட்டறை ஊழியர்களுக்கு வலை

சென்னையில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை அபேஸ் செய்து சென்றதாக வந்த புகாரைத் தொடர்ந்து சௌகார்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சௌகார்பேட்டையில் உள்ள நகை பட்டறையில் 3 கிலோ எடை கொண்ட தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

சௌகார்பேட்டையில் ராஜூபுனியா என்பவர் நகைப் பட்டறையை வைத்துள்ளார். இங்கு நகை செய்யும் தொழிலில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தன்னிடம் இருந்த 3 கிலோ எடை கொண்ட 375 சவரன் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக சௌகார்பேட்டை காவல் நிலையத்தில் ராஜூபுனியா புகார் அளித்துள்ளார்.

3 Kg Gold was looted in Chennai

மேலும் தன் கடையில் பணிபுரிந்த தொழிலாளர்களே அந்த தங்கத்தை அபேஸ் செய்து சென்றதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 83 லட்சமாகும். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சம்பவம் எப்போது, எப்படி நடந்தது என்பது குறித்தெல்லாம் விசாரிப்பதோடு, திருடர்களை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+