தூத்துக்குடி அருகே இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் வைபவ் கப்பல் மூலம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் படகுடன் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 50 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications