Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி அருகே இலங்கை மீனவர்கள் 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் வைபவ் கப்பல் மூலம் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களை கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரும் படகுடன் தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 50 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+