நெல்லையில் கந்துவட்டி தனிப்பிரிவில் குவியும் புகார்கள்.. திணறும் அதிகாரிகள்!
நெல்லையில் கந்துவட்டி தனிப்பிரிவுக்கு மூன்றே நாட்களில் 47 புகார்கள் குவிந்துள்ளன.
நெல்லை: கந்துவட்டி தனிப்பிரிவுக்கு மூன்றே நாட்களில் 47 புகார்கள் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் கடந்த திங்கள் கிழமை குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, மகள்கள் மதி சரண்யா, அட்சய ப்ரணிதா ஆகிய 4 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்க நெல்லையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
கந்துவட்டி தொடர்பான புகார்களை அளிக்க எண்களும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்ட 3 நாட்களிலேயே 47 புகார்கள் குவிந்துள்ளனர். கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications