ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து உள்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள் செய்திக்குறிப்பு:
ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் விவரம்:
1.சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
2.அடையாறு காவல் துணை ஆணையராக சுந்தர வடிவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.சென்னை காவல் நிர்வாக துணை ஆணையராக ராதிகா நியமனமிக்கப்பட்டுள்ளார்.
4.சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையராக எஸ்.மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
5.சென்னை பெரு நகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக அபிநவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.