ஸ்ரீரங்கம் தேர்தல் பணிக்கு 50 பேர் குழு! ஒட்டுமொத்த கேபினெட்டையும் களமிறக்கிய ஜெ.!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக 50 பேர் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 member Aiadmk team ready for Srirangam by election works

அதிமுக அவைத்தலைவர் மதுசூதன், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், ப.மோகன், பா.வளர்மதி, செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி, சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, சின்னையா, கோகுல இந்திரா, சுந்தரராஜ், சண்முகநாதன், சுப்பிரமணியன், ஜெயபால், முக்கூர் சுப்பிரமணியன், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, ரமணா, வீரமணி, ஆனந்தன், தோப்பு வெங்கடாசலம், பூனாட்சி, அப்துல் ரஹீம், விஜயபாஸ்கர், மேலும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டசபை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பெயர்களும் இந்த பட்டியலில் உள்ளன.

ஒட்டுமொத்த அமைச்சரவையே ஸ்ரீரங்கம் சட்டசபை இடைத் தேர்தலில் களப்பணியாற்றப்போகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற துணை சபாநாயகர்களும் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது ஸ்ரீரங்கம் தேர்தலை ஜெயலலிதா ஒரு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டுள்ளார் என்பது புரிகிறது. எளிதாக வெற்றி கிடைத்துவிடும் என்று ஜெயலலிதா நம்பவில்லை என்பதையும் அவரது வியூகம் தெளிவுபடுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+