எந்த 500 டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா?: 16ம் தேதி சட்டசபையில் அறிவிக்கும் ஜெ.
சென்னை: தமிழகத்தில் மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகள் எவையெவை என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா வரும் 16ம் தேதி சட்டசபையில் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார். அதன்படி அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

மேலும் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தை 2 மணிநேரம் குறைத்து அவர் உத்தரவிட்டார். இந்நிலையில் மூடப்படும் 500 கடைகளின் பட்டியலை டாஸ்மாக் மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் தயாரித்தனர். இந்த பட்டியல் மாவட்ட கலெக்டர்களிடம் கடந்த வாரம் அளிக்கப்பட்டது.
மூடப்படும் கடைகளின் பட்டியல் டாஸ்மாக் தலைமையகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. 1,000 கடைகள் அடங்கிய பட்டியலில் இருந்து 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டு மூடப்பட உள்ளன.
எந்தெந்த கடைகள் மூடப்படுகிறது என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா வரும் 16ம் தேதி நடக்கும் சட்டசபை கூட்டத்தில் அறிவிப்பார் என டாஸ்மாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications