அரிசி ஆலை மீது இடி விழுந்ததில் 6 பெண்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலை அருகே சோகம்!
திருவண்ணாமலை, செங்கம் அருகே இடி தாக்கி கட்டிடம் இடிந்த விபத்தில் 6 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலை கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தளவாநாயக்கர்பேட்டை என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

இன்று மாலையில் திடீரென புகைக் கூண்டு மீது இடி விழுந்தது. இதனால் புகைக்கூண்டு இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications