Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு: பெருந்துறை சிப்காட்டில் விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலி!!

Subscribe to Oneindia Tamil

பெருந்துறை: ஈரோடு அருகே பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்திய போது விஷவாயு தாக்கியதில் 7 தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை 2 தொழிலாளர்கள் இன்று சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது விஷவாயு அவர்களைத் தாக்கியது.

இதனால் 2 தொழிலாளர்களும் தங்களைக் காப்பாற்றக் கோரி குரல் எழுப்பினர். இதைத் தொடர்ந்து மேலும் 5 தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினர். ஆனால் விஷவாயு தாக்கியதில் 7 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஒரே நேரத்தில் 7 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+