தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டுவீச்சு: விசாரிக்க 9 தனிப்படைகள்!
தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது குறித்து விசாரிக்க 9 தனிப்படைக்ள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தேனாம்பேட்டை காவல்நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த காவல்துறை உயரதிகாரிகள் வழக்கை நுண்ணறிவு பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட வழக்கில் 3 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீஸ் தேனாம்பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 80 பேரிடம் விசாரணை நடத்தினர். ஆனாலும் இதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த காவல்துறை உயரதிகாரிகள் வழக்கை நுண்ணறிவு பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்துள்ளனர்.இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் 6 நுண்ணறிவு துணை ஆணையர்கள் மற்றும் 12 ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை வேப்பேரியில் நடைபெற்ற குழுவின் ஆலோசனை கூட்டத்தில் குற்றவாளிகளை பிடிப்பது குறித்த யூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே மண்ணெண்ணெய் குண்டுவீச்சு கலந்தாய்வு குறித்து விசாரிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications