புல்லட்டில் தோழியுடன் வந்த கல்லூரி மாணவர்.. வாணியம்பாடி அருகே நேர்ந்த பயங்கரம்! இருவரும் பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞசாலையில் இருசக்கர வாகன விபத்தில் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தோழி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் இவரது மகள் திவ்யதர்ஷினி ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகன் பவன்ரத்தினம் திவ்யதர்ஷினி மற்றும் பவன்ரத்தினம் இருவரும் சென்னை அக்னி கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த நிலையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திவ்யதர்ஷினி விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனது தோழியின் இல்லத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் திவ்யதர்ஷினி முன்னதாக ஆம்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் காத்திருந்த தனது கல்லூரி நண்பர் பவன் ரத்தினத்துடன் இருசக்கர வாகனத்தில் (புல்லட் ) கிருஷ்ணகிரிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து இன்று மாலை திரும்பி வரும் வழியில் வாணியம்பாடி செட்டியப்பணுர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் தடுப்பு சுவற்றின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுந்தது பவன் குமார் தலையில் காயம் பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். திவ்ய லட்சுமி மருத்துவமனை கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கல்லூரி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications