For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத்தகராறில் 8 வயது மகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூர தந்தை.. மதுரை அருகே பயங்கரம்

மதுரை அருகே குடும்பத்தகராறில் 8 வயது மகளை தந்தையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

மதுரை: திருமங்கலம் அருகே குடும்பத்தகராறில் 8 வயது மகளை தந்தையே கோடரியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வில்லூரைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் இருளாயி என்ற 8 வயது மகளும் உள்ளனர்.

A father kills daughter with axe near in Madurai

இந்நிலையில் கணவன் முருகன் மற்றும் மனைவி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கோடரியை எடுத்து இருவரையும் வெட்டியுள்ளார்.

தந்தை கோடரியால் வெட்டியதில் படுகாயமடைந்த 8 வயது சிறுமி இருளாயி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி லட்சுமி பலத்த காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான தந்தைமுருகனை தேடி வருகின்றனர்.

English summary
A father kills daughter with axe near in Madurai. a father named Murugan attacked wife lakshmi and daughter with axe. injured wife admitted in hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X