பட்டப்பகலில் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியருக்கு கத்திக்குத்து... திருவண்ணாமலையில் பயங்கரம்
திருவண்ணாமலையில் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை: பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலையில் கார்த்திகேயன் என்பவர் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் கார்த்திகேயனின் கழுத்தில் கத்தியால் குத்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயமடைந்த கார்த்திகேயன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கத்தியால் குத்திய நபர் யார்? எதற்காக குத்தினர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அரசுப்பள்ளி ஆசிரியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக ஆசிரியர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications