கோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கோவையில் ஏற்பட்ட விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு- வீடியோ
கோவை: நீலாம்பூர் புறவழிச்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
கோவை நீலாம்பூர் புறவழிச்சாலையில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்கள் கோகுல்நாத், சிதம்பரநாத், கவுதம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 6 பேரும் சூளுர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கார்கள் வேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. விபத்துக்களை தடுக்க நீலாம்பூர் புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications