டெங்கு மரணம் தவிர்க்காத அரசு அகல வேண்டும்... நேரடியாகவே சாடும் கமல்ஹாசன்!
டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாத அரசு அகல வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் கூறி வருகின்றனர்.
எனினும் மாநிலத்தில் டெங்கு மரணங்கள் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகின்றன. தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டிஏவி மாணவன் பலி
சென்னை ஐஐடியில் படித்த மாணவர் பிரேம் அவினாஷ், மதுரையைச் சேர்ந்த பிரியா என்ற பெண், வேடசந்தூரில் 2 குழந்தைகள் என டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலுக்கு கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் பலியாகியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜுரச் சங்கு வீண்
'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யா அரசு அகல வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழித்திருங்கள் பெற்றோர்
அரசு தூங்குகிறது பெற்றோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெங்கு பற்றி முன்னரே சொன்ன கமல்
டெங்கு பிரச்னை குறித்து கடந்த ஜூலை மாதமும் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதில் நீட் பற்றி எனக்குத் தெரியாது. டெங்கு பற்றி எனக்குத் தெரியும், என் குழந்தை ஏறக்குறைய இறந்தேயிருக்கும். எனவே தமிழக அரசே இதில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் விலகுங்கள் என்று அப்போதும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications