சிம்பு அரசியலுக்கு வருகிறாரா... டி ராஜேந்தரின் பதில் இதுதான்
சிம்பு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு டி ராஜேந்தர் பதில் அளித்துள்ளார்.
சென்னை: சிம்பு அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா எனபதை பொறுத்திருந்து பாருங்கள் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்றிரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் ரசிகர்கள் திரண்டனர்.

பெங்களூரில் சிம்பு
அப்போது சிம்பு சென்னையில் இல்லை என்றும் படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் ரசிகர்களை டி.ராஜேந்தரையாவது பார்க்க வேண்டும் என்று ரசகிர்கள் கேட்டுக் கொண்டனர்.

ரசிகர்களை சந்தித்த டி.ஆர்.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தர் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவர் ஒரு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கப்பட்டது.

சிம்புவுக்கான அன்பு
அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். என் மகனுக்கு பட்டம் , பதவிகளை காட்டிலும் இந்த ரசிகர்களின் அன்பே போதுமானது. என் மகனுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நான் 8 வயதில் திமுக மேடையில் மைக்கை பிடித்தேன். பின்னர் 28 வயதில் திமுகவில் இணைந்து எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியேரின் ஆட்சி காலங்களை சந்தித்து விட்டேன்.

வெயிட் அண்டு சி
என் மகனுக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். அவர்களை நான் கூட்ட ஆரம்பித்தால் போதும். விரைவில் கூட்ட போகிறேன். அவங்க வராங்க, இவங்க வராங்க, எவங்க வேணாலும் வரட்டும். நாங்கள் என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை அறிய வெயிட் அண்டு சி என்றார் டி.ராஜேந்தர்.












Click it and Unblock the Notifications