For Daily Alerts
Just In
36 வது ஆண்டாக கல்வி உதவித்தொகையை வழங்கிய சிவகுமார் கல்வி அறக்கட்டளை!
சென்னை: சிவகுமார் தனது 100 வது படத்தின் போது ஆரம்பித்த கல்வி அறக்கட்டளை இந்த ஆண்டுடன் 36 ஆண்டுகளை நிறைவு செய்கிறது, இதனையோட்டி இந்த வருடமும் மாணவர்களுக்கு வழக்கம் போல கல்வி உதவித் தொகையினை வழங்கி இருக்கிறது நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளை.
சென்னை தியாகராயர் ரோட்டில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 25 மாணவர்களுக்கு ரூ. 1௦, ௦௦௦ வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
விழாவின் இறை வாழ்த்துப் பாடலை சிவகுமார் மகள் பிருந்தா பாடி ஆரம்பித்து வைத்தார், சிவகுமாரின் மகன்களும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுமான சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் விழாவில் கலந்து கொண்டனர்.
English summary
Actor Sivakumar’s Sivakumar Educational and Charitable Trust 36thAward Function Celebrates Thiyagaraya Community Centre in T Nagar . The function began with a classical number performed by Sivakumar’s daughter Brindha.
Story first published: Sunday, June 28, 2015, 16:53 [IST]