சென்னை மக்களுக்கு நமீதாவும் கை கொடுத்தார்..!
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வரும் நிலையில் நடிகை நமீதாவும் இன்று உதவிக் கரம் நீட்டினார்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து உதவிகள் குவிந்தபடி உள்ளன. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிவாரண உதவிகளை அளித்தவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நமீதா இன்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

திருவொற்றியூரில்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார்.

நிவாரணப் பொருட்கள்
அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ், சோப் போன்ற பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

கூட்டாக இணைந்து
பர்வீன் டிராவல்ஸ் மற்றும் அம்சொலூட் ஈவன்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அவர் இந்த உதவிகளைச் செய்தார்.

மக்கள் கூட்டம்
நமீதா உதவிப் பொருட்களை வழங்கும் தகவலைத் தொடர்ந்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. இறுப்பினும் முகம் சுளிக்காமல் நமீதா பொறுமையாக நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

திரையுலக உதவிகள்
வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு திரையுலகினர் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளனர், தொடர்ந்தும் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது நமீதாவும் அவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications