ரஜினிகாந்த் வீட்டருகே கூடுதல் போலீஸ் குவிப்பு... பாதுகாப்புக்காகவா?
ரஜினிகாந்த் வீட்டருகே கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ
சென்னை: ரஜினிகாந்த் வீட்டருக்கே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் இன்று இரண்டாவது கட்டமாக அவரது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் வரும் 31-ஆம் தேதி அரசியலுக்கு வருவது குறித்து அறிவிக்கவுள்ளதாக கூறினார்.

இந்நிலையில் அவரது வீட்டருகே கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அரசியல் குறித்து பேசிவருவதால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை தடுப்பதற்காக அவரது வீட்டருகே கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொதுவாக ரஜினி தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பை விரும்பாதவர். எனவே ராகவேந்திரா அவென்யூ சாலை தொடங்கும் இடத்தில்தான் போலீஸார் குவிந்திருப்பர். அதுபோல் அந்த இடத்தில் இன்னும் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications