பாஜக ஒழிக... ஜெ. வீட்டின் முன் கெட்ட வார்த்தையுடன் ஆவேசக் கூச்சலிட்ட அதிமுகவினர்
சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்து வரும் சோதனைக்கு பாஜகவே காரணம் என்று கூறி தினகரன் ஆதரவு அதிமுகவினர் கோஷம் போட்டு ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
இரவு 9 மணி முதல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வருமான வரி சோதனை என்ற தகவல் கிடைத்ததும் அங்கு அதிமுகவினர் குவிந்து விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தினகரன் ஆதரவாளர்கள்தான்.

போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு கூடிய தினகரன் ஆதரவாளர்கள், பாஜகவை எதிர்த்துக் கோஷமிட்டனர். பாஜகதான் இந்தசோதனைக்குக் காரணம் என்று அவர்கள் கூச்சலிட்டனர். மோடியைக் கண்டித்தும் பாஜக ஒழிக என்று எழுதியும் போராட்டம் நடத்தினர். மோடி கொடும்பாவியை எரிக்கவும் சிலர் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் போயஸ் தோட்ட இல்லத்தின் முன்பு போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications