நாங்க வெள்ளத்தில் தத்தளிக்கிறோம், எங்கய்யா எங்க எம்.எல்.ஏ.?: கோபத்தில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மணலி அருகே இருக்கும் சடையங்குப்பம் பகுதி வெள்ளத்தால் படாதபாடு பட்டுள்ளது. இருப்பினும் அத்தொகுதி எம்.எல்.ஏ. குப்பன் இதுவரை மக்களை சந்திக்க வராததால் அவர்கள் கோபத்தில் உள்ளனர்.

மணலி அருகே இருக்கும் சடையங்குப்பம் வங்கக் கடலை ஒட்டி அமைந்துள்ளது. இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையில் சடையங்குப்பம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆள் மூழ்கும் அளவுக்கு அங்கு வெள்ள நீர் தேங்கியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

ADMK MLA Kuppan disappoints his people

இந்நிலையில் தற்போது தான் வெள்ளம் சற்று வடிந்துள்ளது. இருப்பினும் தொலை தொடர்பு சேவை இன்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், மாதவரம் எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளிட்டோர் படகு மூலம் சடையங்குப்பம் சென்றனர்.

மக்களை சந்தித்து அவர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். சடையங்குப்பம் திருவொற்றியூர் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த பகுதி ஆகும். இந்நிலையில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.வான அதிமுகவைச் சேர்ந்த குப்பன் இதுவரை சடையங்குப்பம் பக்கமே செல்லவில்லை.

தொகுதி பக்கம் வராமல் இருக்கும் குப்பன் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+