அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு... எதற்காகத் தெரியுமா?
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து பேரறிவாளனின் பரோல் விவகாரம் குறித்து பேச ஆதரவு தெரிவிக்குமாறு கோரியுள்ளனர்.
சென்னை : அதிமுகவின் ஆதரவு எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் பேரறிவாளர் பரோல் விவகாரம் குறித்து பேசுவதற்கு ஆதரவு கோரினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ள தனது தந்தையை பார்க்க 30 நாட்கள் பரோலில் விட வேண்டும் என்று சிறைத் துறையினரிடம் பேரறிவாளன் மனு அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசின் சட்டவிதிமுறை காரணமாக பரோல் தர முடியாது என்று சிறைத்துறை மறுத்து விட்டது.
பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களை கவனித்துக் கொள்ள மகனை பரோலில் விட வேண்டும் என்று அமைச்சர்களை சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்து வருகிறார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக ஆதரவு மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, முவேந்தர் புலிப்படை உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் பேரறிவாளன் பரோல் விவகாரம் குறித்து அவையில் பேச திமுகவின் ஆதரவையும் அதிமுக ஆதரவு பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோர் கேட்டுக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறையில் அவரை சந்தித்த இவர்கள், சட்டசபையில் பேரறிவாளன் குறித்து பேசும் போது ஆதரவு அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications