அப்போ பலாத்காரம் செய்தால் டபுள் ப்ரோமோஷனா பாஸ்?.. கொந்தளிக்கும் மக்கள்!
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
ஈரோடு: டாஸ்மாக் போராட்டத்தின் போது பெண்ணின் காதில் அறைந்து அவரை செவிடாக்கி சர்ச்சைக்குள்ளான ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக அண்மையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
அப்போது ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஒரு பெண்ணை ஓங்கி அறைந்தார். இதில் அப்பெண்ணின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

மக்கள் கொந்தளிப்பு
இந்நிலையில் பாண்டியராஜனுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கி அழகு பார்த்துள்ளது. தமிழக அரசு. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நமது வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பு:

இந்த ஆட்சி வீழும்
கபீர் அகமது என்ற வாசகர் கூறியிருப்பதாவது, பெண்களை கீழ்த்தரமாக நடத்தி மேலும் பெண் மீது வன்முறை நடத்திய காவல் துறையின் அதிகாரிக்கு பதவி உயர்வா? என்ன அநியாயம் நடக்குது தமிழ் நாட்டில்? பெண்கள் நம் அன்னையர்கள், பெண்களை கீழ்த்தரமாக நடத்தும் ஆட்சி ஒருநாளும் வெளங்காது. மிக விரைவில் இந்த ஆட்சி வீழும் எனக் கூறியுள்ளார்.

டபுள் புரோமோஷனா?
ஸ்ரீனிவாசன் என்பவர் அப்போ பலாத்காரம் செய்தால் டபுள் புரோமோஷனா பாஸ் எனக் கேட்டுள்ளார்? அடித்தவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதால் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அரசியல் சட்டம் வாழ்க
முகமது இக்சான் என்பவர் கூறியிருப்பதாவது, பொது மக்களுக்கு சிறந்த பாதுகாப்பிற்கு அளிக்க வேண்டிய காவல்துறைக்கு பெண்களை அடிப்பதற்கு பதவி உயர்வு. இந்திய அரசியல் சட்டம் வாழ்க எனக் கூறியுள்ளார்.

சுலபமா முடிச்சு கொடுத்ததால்
ஷாகின் என்பவர், அரசு குடுத்த வேலைய சுலபமா முடிச்சு கொடுத்ததால் கிடைத்த பரிசு என தெரிவித்துள்ளார். பெண்களைத் தாக்கியதால் அரசு இந்தப் பரிசை அவருக்கு கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

என்ன கொடுமைலாம் பார்க்கனுமோ..
தமிழக விவசாயி என்ற பெயரில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இன்னும் என்ன என்ன கொடுமைலாம் பாக்க வேண்டி இருக்கோ..? எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஒரு அறிவிப்பு
ஜெயக்குமார் என்பவர், தமிழக அரசு ஒரு அறிவிப்பு, டாஸ்மாக்கு எதிராக போராட்டம் செய்யும் பெண்களை அடித்தால் பதவி உயர்வு என விளம்பரம் செய்வதாக நக்கலடித்துள்ளார்.
|
சன்மானமும் இவருக்கு தருவார்கள்
என்எஸ்கே என்பவர் தெரிவித்துள்ள கருத்தில், மக்களிடமிருந்து அரசியல் வாதிகளை காப்பாற்றவே போலீஸ் தவிர
மக்களை காப்பாற்ற அல்ல. இதனால் தான் இவருக்கு பதவி உயர்வு. இது தவிர சன்மானமும் இவருக்கு தருவார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

என்னம்மா அறையறாரு
கும்கி என்ற பெயரில் தெரிவித்திருக்கும் கருத்தில் அதுதாண்டா போலீசு. என்னம்மா அறையறாரு. அதுக்குதான் பதவி உயர்வு என தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications