For Daily Alerts
Just In
நடுவானில் கோளாறு: 156 பயணிகளுடன் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
சென்னை: சென்னையில் இருந்து ஷார்ஜா கிளம்பிய ஏர் அரேபியா விமானம் எந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து 156 பயணிகளுடன் ஏர் அரேபியா விமானம் ஷார்ஜாவுக்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டது.
நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கே திரும்பி வந்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டதை அறிந்து பயணிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் பத்திரமாக தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
English summary
Air Arabia flight from Chennai to Sharjah has made emergency landing in Chennai after engine issue. The flight took off with 156 passengers.
Story first published: Wednesday, June 21, 2017, 8:28 [IST]