ஏர் இந்தியா பைலட் தாக்கி இன்ஜினியர் மூக்கு உடைப்பு! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: ஏர் இந்தியா விமான பைலட் தாக்கி, அந்த நிறுவனத்தின் இன்ஜினியர் படுகாயமடைந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து டெல்லி வழியாக பாரீஸ் செல்லும் ஏர் இந்தியா விமானம் (AI 143) இன்று காலை 7.30 மணிக்கு கிளம்ப தயாராக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக விமானத்தின் புறப்பாடு தாமதப்பட்டது.
இதையடுத்து பயணிகள், கோபமடைந்து விமானத்தை உடனடியாக கிளப்புமாறு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த தாமதத்தினால் கோபமடைந்த பைலட், மாணிக்லால், விமானத்தின் இன்ஜினியர் கண்ணன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

விமானி அறையில் வைத்து இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணனை மாணிக்லால் தாக்கத் தொடங்கி உள்ளார். இந்த தாக்குதலால், கண்ணன் மூக்கு உடைபட்டு ரத்தம் வழிந்துள்ளது.
இதையடுத்து விமான நிலைய காவல் நிலையத்தில், மாணிக்லாலுக்கு எதிராக, கண்ணன் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வந்தபோது, தனது அறை கதவை பூட்டிக் கொண்டு வெளியே வர மறுத்துள்ளார் மாணிக்லால். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணிக்லால் வெளியே வந்தார். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து அறிந்துகொள்ள மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தால் சுமார் நான்கு மணி நேரம் விமானம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. ஏர் இந்தியா விமானத்திற்குள் நடந்த இந்த மோதல் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தாக்குதலில் தொடர்புள்ள பைலட்டை ஏர் இந்தியா சஸ்பெண்ட் செய்துள்ளது. விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications