நான் தலைவனும் இல்லை.. நல்ல நடிகனும் இல்லை... அழகிரியின் ஜாலி அறிக்கை!
மதுரை: கருணாநிதியின் 30-ஆம் நாள் அஞ்சலிக்காக நடத்தப்பட்ட பேரணிக்கு வந்திருந்த அத்தனை கழக உடன்பிறப்புகளுக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி ஒரு ஜாலியான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி மறைந்தவுடன் திமுகவில் எப்படியாவது இணைந்து விடலாம் என மனக்கோட்டை கட்டினார் அழகிரி. ஆனால் திமுகவோ அழகிரியை எக்காரணம் கொண்டும் கட்சியில் சேர்க்க முடியாது. இது கருணாநிதியே எடுத்த முடிவு என்று கூறிவிட்டனர்.
எனினும் விடாமல் அக்கட்சியில் சேருவதற்கு மிரட்டியும், கெஞ்சியும் பார்த்தார் அழகிரி.

பேரணி
மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சவும் இல்லை, கெஞ்சலுக்கு மனம் இறங்கவும் இல்லை. இதையடுத்து அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி அதாவது கருணாநிதியின் 30-ஆவது நாளையொட்டி அமைதி பேரணியை நடத்த முடிவு செய்தார்.

ஒன்றரை லட்சம்
அந்த பேரணியில் கருணாநிதியின் உடன்பிறப்புகள் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அந்த நாளில் பேரணியும் நடத்தப்பட்டது. இதில் அண்ணா, கருணாநிதியின் சமாதிகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தனக்கு ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வந்துள்ளனர் என்றார்.

பெரும் ஏமாற்றம்
மேலும் இந்த பேரணியை சிறப்பித்த அத்துனை பேருக்கும் நன்றி என்று கூறினார். உதார் விட்ட அழகிரி அன்று ஏதேனும் அறிவிப்பார் என உற்சாகமடைந்த நிலையில் அவர் பம்மிவிட்டு சென்றார். இது பெரும் ஏமாற்றத்தை தந்தது.

நன்றி
இந்நிலையில் இன்று தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் தலைவர் கருணாநிதியின் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே! நான்...
ஒரு தலைவன் அல்ல..
ஒரு மேடை பேச்சாளன் அல்ல
ஒரு நடிகனும் இ்லலை...
தனிமனிதனாகிய
தொண்டனாகிய எம் வேண்டுகோளை ஏற்று என் தந்தை கருணாநிதியின் 30-ஆவது நினைவு பேரணிக்கு அஞ்சலி செலுத்த என் மீது பாசம் கொண்டு அலைகடலாய் வருகை தந்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தங்கள் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன். நன்றி என்று ஒரு கடிதத்தை அழகிரி எழுதியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications