உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன்தான் கூட்டணி… ஒன்இந்தியாவிடம் மனம் திறந்த திருநாவுக்கரசர்: வீடியோ
உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன்தான் கூட்டணி வைப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் ஒன்இந்தியாவிற்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ...
முற்றிலுமாக இயங்க முடியாத செயல்படாத ஒரு அரசாகவே தமிழக அரசு இருக்கிறது. அதற்கு காரணம் ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய அதிமுகவில் நடைபெறும் கோஷ்டி சண்டைதான். 3 அணிகளாக கட்சி பிரிந்திருப்பதால் ஆட்சியை பாதிக்கிறது. வரலாறு காணாத வறட்சி, குடிநீர் பஞ்சம் என ஏராளமான பிரச்சனைகள் தமிழகத்தில் உள்ளன.

பாஜகவில் உள்ள நண்பர்கள், தலைவர்கள், மந்திரிகள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் என்னை எப்படி வாழ்த்த முடியும்? அவர்கள் பாராட்டுவார்கள் என்று நான் எப்படி எதிர்ப்பார்க்கலாம்? திட்டுவது அவர்களின் உரிமை, நன்றாகத் திட்டட்டும்.
பஞ்சாயத்து அமைப்பு முற்றிலுமாக முடங்கிப் போய் கிடக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பிறகும், தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிப் போடப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது. உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்ட பின்னர், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications