உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை தேவைப்படும்போது முடிவு செய்வோம் : தமிழிசை
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை பிறகு முடிவு செய்வோம் என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
திருச்சி : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை முடிவு செய்வோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பாஜகவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன.

அதன் பிறகு தமிழிசை செளந்தரராஜன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய பட்ஜெட்டை பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்த உள்ள பட்ஜெட்டை செயல்படுத்த மக்களின் ஆதரவு தேவை. அதனால் மாநிலம் முழுவதும், பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை நடத்த உள்ளோம்.தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும், உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணிக்கு நாங்கள் யாருக்காவும் காத்திருக்கவில்லை. பாஜக தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி தேவையா இல்லையா என்பது குறித்து கலந்து ஆலோசிப்போம் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆதரவையும், தமிழகத்தில் எதிர்ப்பையும் காண்பித்து இரட்டை வேடம் போடுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்திருப்பதற்குக் காரணம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் தான். அதனை பாஜக சரி செய்து வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications