உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை தேவைப்படும்போது முடிவு செய்வோம் : தமிழிசை
உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை பிறகு முடிவு செய்வோம் என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.
திருச்சி : தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பாஜகவிற்கு கூட்டணி அவசியமா என்பதை முடிவு செய்வோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
திருச்சியில் நேற்று பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பாஜகவின் உள்ளாட்சித் தேர்தல் வியூகங்கள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டன.

அதன் பிறகு தமிழிசை செளந்தரராஜன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தற்போதைய பட்ஜெட்டை பற்றி தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்த உள்ள பட்ஜெட்டை செயல்படுத்த மக்களின் ஆதரவு தேவை. அதனால் மாநிலம் முழுவதும், பட்ஜெட் விளக்கக் கூட்டத்தை நடத்த உள்ளோம்.தமிழகத்தில் விரைவில் வரவிருக்கும், உள்ளாட்சி தேர்தலுக்காக கூட்டணிக்கு நாங்கள் யாருக்காவும் காத்திருக்கவில்லை. பாஜக தமிழகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எனவே, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணி தேவையா இல்லையா என்பது குறித்து கலந்து ஆலோசிப்போம் என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆதரவையும், தமிழகத்தில் எதிர்ப்பையும் காண்பித்து இரட்டை வேடம் போடுகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்திருப்பதற்குக் காரணம் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் தான். அதனை பாஜக சரி செய்து வருகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?











Click it and Unblock the Notifications