அம்மா கால்சென்டருக்கு முதல் நாளில் 2 ஆயிரம் பேர் அழைப்பு.. குறைகளை குமுறினர்
சென்னை: பொதுமக்களின் குறைகளை கேட்டறிவதற்காக 'அம்மா அழைப்பு மையம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த மையத்திற்கு 1100 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம். வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் தெரிவிப்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 15 ஆயிரம் குறைகளை கேட்க முடியும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குறைகளை கேட்டு அறிவதற்காக 138 அழைப்பு ஏற்பாளர்கள் இந்த மையத்தில் இருப்பார்கள்.

இ-மெயில், எஸ்எம்எஸ்
பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் தொலைபேசி வழியாக தெரிவிக்கப்பட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார் நிலவரம்
புகார் தெரிவிக்கும் பொது மக்களின் பெயர் விவரங்கள், குறைகள் பற்றிய தகவல் ஆகியவையும் கணினியில் பதிவு செய்யப்பட்டு புகார் தெரிவித்தவர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலமாக தகவல்கள் அனுப்பப்படும்.

2 ஆயிரம் போன்கள்
முதல் நாளான நேற்றே அழைப்பு மையத்திற்கு பலர் போன் செய்து தங்களது குறைகளை தெரிவித்தனர். ஒரே நாளில் 2 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாவட்டங்கள் அதிகம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான போன் அழைப்புகள் வந்திருந்தன.

வெள்ள நிவாரணம்
தமிழக அரசின் சார்பில் ரூ.5 ஆயிரம் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பலருக்கு வெள்ள நிவாரணம் கிடைக்காமலேயே உள்ளது. இதுதொடர்பாக பலர் போன் செய்து விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் எப்போது கிடைக்கும் என்று கேள்வி எழுப்பினர். இதுபற்றிய தங்களது குறைகளையும் பாதிக்கப்பட்டவர்கள் பதிவு செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications