கொடுப்போம், கொடுப்போம், கொடுக்கப் போகிறோம்.. அன்புமணியின் 'அசத்தல்' வாக்குறுதி!
வேலூர்: தமிழகத்தில் தற்போது நிதிநிலைமை மோசமாக உள்ள நிலையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் வெற்று அறிக்கைகளை வெளியிட்டு மக்களை ஜெயலலிதா ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி.
சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், நேற்று கடைசியாக அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என பாமக விமர்சித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் வேலூரில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுகிறார். ஏற்கனவே அரசின் கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் செயல். இதனால் தமிழ்நாடு வளர்ச்சி அடையப்போவது கிடையாது. நாங்கள் மக்களுக்கு எந்தவிதமான இலவசங்களும் கொடுக்கப்போவதில்லை. நாங்கள் தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம். நல்ல தரமான சுகாதாரத்தை கொடுக்கப் போகிறோம். விவசாயிகளுக்கு தேவையான பொருட்களை கொடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications