தமிழகத்துக்குள் புகுந்து செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த ஆந்திரா போலீஸ்! மே.வங்கத்திலும் 'ரெய்டு'!
சென்னை: தமிழகத்துக்குள் புகுந்து செம்மரக்கட்டைகளை ஆந்திரா காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் தமிழக போலீசுக்கு தெரிவிக்காமல் செம்மரக் கட்டைகளை ஆந்திரா போலீஸ் எடுத்துச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் மேற்கு வங்கத்திலும் ஆந்திரா போலீசார் சோதனை நடத்தி செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி 20 அப்பாவி தமிழர்களை சுட்டுப் படுகொலை செய்த கொந்தளிப்பு தமிழகத்தில் இன்னும் அடங்கவில்லை. இந்நிலையில் செம்மரம் கடத்தியதாக சில நாட்களுக்கு முன் கருணா என்பவரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆவடி அருகே காட்டூர் சிட்கோவில் தனியார் கிடங்கு ஒன்றில் 3,375 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழக போலீஸாருக்கு தெரிவிக்காமல் ஆந்திராவுக்கு அம்மாநில காவல்துறையினர் கொண்டுச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்திலும்...
இதேபோல் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியிலும் ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தி 11 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மியான்மரைச் சேர்ந்த ராஜன் என்பவர் சிலிகுரியில் நடத்தி வந்த குடோனில்தான் இந்த செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆந்திரா போலீசார் பறிமுதல் செய்த இந்த செம்மர கட்டைகள் மதிப்பு ரூ 10 முதல் ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications