2016 டிசம்பர் 5ம் தேதிதான் ஜெ. இறந்தார்.. அப்பல்லோ விளக்கம்
ஜெயலலிதா மரணமடைந்தது கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிதான் என்று அப்பல்லோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணமடைந்தது பற்றி தேவையான குழப்பங்கள் பரவுவது துரதிஷ்டவசமானது என்றும் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிதான் ஜெயலலிதா மரணமடைந்தார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா சகோதரர் திவாகரன், 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பால் ஜெயலலிதா இறந்து விட்டார் என்று கூறியிருந்தார்.

அப்பல்லோ மருத்துவமனைகளின் கிளைகளை காப்பாற்றுவதற்காக ஒருநாள் காத்திருந்து ஜெயலலிதாவின் மரணத்தை அறிவித்தனர் என்றும் கூறியிருந்தார் திவாகரன். இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. யாருடைய அழுத்தம் காரணமாக இது நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் புதிய விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனை அளித்த விளக்கத்தில் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிதான் உயிரிழந்தார் என்று கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் பற்றியும் உயிரிழந்த தேதி, நேரம் பற்றி தவறான தகவலை கூறி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவது துரதிஷ்டவசமானது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது.
ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின் போது மருத்துவமனையில் அனைத்த விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது. ஜெயலலிதா மரணமடைந்தது துரதிர்ஷ்டவசமானது என்றும் அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை பற்றி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்கனவே ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications