For Quick Alerts
For Daily Alerts
Just In
மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸ்காரரை தாக்கிய பேரூராட்சி தலைவர்!
பழநி: பழநி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சி தலைவராக இருப்பவர் சுந்தரம் (அதிமுக). இவர் மட்டப்பாறை என்ற இடத்தில் இருந்து டிராக்டர் மூலம் சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க முயன்ற சிவகணேசன் என்ற போலீஸ்காரரை சுந்தரமும், டிராக்டர் டிரைவரும் சேர்ந்து தாக்கி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த போலீஸ் சிவகணேசன் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள அதிமுக பேரூராட்சி தலைவர் சுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
English summary
Aaigudi municipal local body president Sundaram allegedly attacked a police man.
Story first published: Thursday, May 28, 2015, 8:54 [IST]