கம்பி கட்டும் தொழிலாளியைக் கொன்று எரித்து சாம்பலை குளத்தில் கரைத்த அட்டாக் பாண்டி கூட்டாளிகள்!
மதுரை: திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த 2 வருடமாக தலைமறைவாக இருக்கும் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் நான்கு பேர் சேர்ந்து ஒரு வாலிபரைக் கொன்று உடலை எரித்து சாம்பலை குளத்தில் கரைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குருமணி (25). கம்பி கட்டும் தொழிலாளி. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அட்டாக் பாண்டியி கூட்டாளிகள் சிலருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இரு தரப்பும் அவ்வப்போது மோதி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குருமணி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் குருமணியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குருமணியை தேடி வந்தனர்.
குருமணியுடன் மோதியவர்களை பிடித்து விசாரித்த போது குருமணி கடத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து குருமணியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் அட்டாக் பாண்டியின் கூட்டாளியான சந்தானம் உள்பட 4 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் உண்மை தெரிய வந்தது.
குருமணியை சந்தானம் உள்பட 9 பேர் சேர்ந்து கடத்தி அடித்து கொன்றுவிட்டு உடலை மேலஅனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள அடர்ந்த சீமை கருவேல மரங்களுக்கு மத்தியில் எரித்துள்ளனர். உடல் முழுவதும் எரிந்ததும் சாம்பலை அள்ளி அருகில் உள்ள குளத்தில் கரைத்து வி்ட்டனர்.
இதையடுத்து சந்தானம், திருப்பதி, முத்துமணி, நயினா ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்து வரும் நிலையில் அவரது கூட்டாளிகள் செய்த இந்த படு பாதக கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications