நீதிபதிகள் நியமன விவகாரம்.. நீதிபதி கட்ஜூக்கு அட்டர்னி ஜெனரல் ரோத்தகி கண்டனம்
சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக கூறி தேவையற்ற சர்ச்சையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ கிளப்பிவிட்டிருக்கிறார் என்று அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி கூறியுள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூ தமது இணையப் பக்கத்தில் பதிவு செய்தது இது:
- நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்கிறது;
- சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த அசோக்குமாரை கூடுதல் நீதிபதியாக்குவதற்காக பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கை திமுக அமைச்சர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து மிரட்டினார்; (Justice Katju Blog)
- முதல்வர் ஜெயலலிதா நீதித்துறையில் தலையிட்டதே இல்லை
கட்ஜூ கருத்துக்கு எதிர்வினைகள்:
- நீதிபதி கட்ஜூ கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியிருந்தார்.
- நீதிபதி கட்ஜூவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.. முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
- நீதிபதிகள் நியமனத்தில் நிர்ப்பந்தம் இருப்பதை அறிந்த கட்ஜூ, அதனை அப்போதே அம்பலப்படுத்தாது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கேள்வி எழுப்பினார்.
- மார்க்கண்டேய கட்ஜூ கூறுவது அனைத்தும் உண்மை என்றாலும், இதுபற்றி உரிய நேரத்தில், குரல் கொடுக்காமல் தற்போது கூறுவது சரியல்ல என்று மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி விமர்சித்தார்.
- கட்ஜூ குற்றச்சாட்டு தொடர்பாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
<div id="fb-root"></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = "//connect.facebook.net/en_US/all.js#xfbml=1"; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, 'script', 'facebook-jssdk'));</script> <div class="fb-post" data-href="https://www.facebook.com/Kalaignar89/posts/822669971078543" data-width="466"><div class="fb-xfbml-parse-ignore"><a href="https://www.facebook.com/Kalaignar89/posts/822669971078543">Post</a> by <a href="https://www.facebook.com/Kalaignar89">Kalaignar Karunanidhi</a>.</div></div>
- இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், நீதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க வலியுறுத்தி, தி.மு.க. எம்.பி.க்கள் தம்மைச் சந்தித்துப் பேசியது உண்மைதான். தி.மு.க நெருக்கடி தரவில்லை என்றார்.
- இந்த நிலையில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, கட்ஜூ வகித்து வரும் பிரஸ் கவுன்சில் தலைவர் பதவி அக்டோபர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் அவரது விமர்சனம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்கிறார்.