நாந்தான் 'அம்மா'வுக்கு நெருக்கமாச்சே.. எதுக்கு இத்தனை கேஸ்.. அரசக்குமார் ஆச்சரியம்!

தன் மீது போடப்பட்டுள்ள அத்தனை வழக்குகளையும் சட்ட ரீதியாக உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசக்குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கல்வி நிறுவன அனுமதி வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பல வழக்குகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் செல்லத்துரை என்பவர் 2006ம் ஆண்டு பி.டி.அரசகுமார் என்னிடம், தான் தொடங்க உள்ள கல்வி நிறுவனத்தில் அதிகமான வருமானம் கிடைக்க உள்ளது. அதனால் நீங்களும் பங்குதாரர் ஆகுங்கள் என்று ஆசை வார்த்தை கூறி பணம் ரூ.5 லட்சம் வாங்கினார். அதன் பிறகு அந்த பணமும் தரவில்லை. கணக்குகளும் காட்டவில்லை.
இது பற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்த அரசகுமாரிடம் கேட்க சென்ற என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார் என்று கொடுத்த புகாரின் பேரில் சிறையில் இருக்கும் அரசக்குமாரை போலீசார் கைது செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பி.டி.அரசகுமார் அங்கிருந்த செய்தியாளர்களிடம், நான் 1989 முதல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவன். அப்படி இருக்கும் போது ஏன் என் மீது இத்தனை வழக்குகள் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
இப்போது போடப்பட்ட வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனை நீதிபதியிடம் சொல்லிவிட்டேன். விரைவில் சட்டப்படி எல்லா வழக்குகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வருவேன் என்று கூறினார்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications