ஜவுளிக்கடை பையில் வைத்து ரோட்டில் வீசப்பட்ட ஆண் குழந்தை: ராஜபாளையத்தில் பரபரப்பு
ராஜபாளையம்:பிறந்து சிலநாள்களே ஆன ஆண் குழந்தை பையில் வைக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டு கிடந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராஜபாளையம் செவல்பட்டி தெற்குத்தெரு பகுதியில், ஒரு துணிக்கடை பை மர்மமான முறையில் ரோட்டின் அருகே கிடந்தது. அதற்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதியினர் சிலர் வந்து பார்த்தபோது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை பைக்குள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார், குழந்தையை மீட்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவர்கள் குழுவினர் அந்த குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது. குழந்தையை பையில் வைத்து சாலையில் வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரை கண்டுபிடிக்கும் வரை, இக்குழந்தை அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications