திருவாரூர் வங்கியில் ரூ. 2 கோடி கவரிங் நகைகளை வைத்து மோசடி- நகை மதிப்பீட்டாளர் மாயம்
கனரா வங்கியில் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகைகளுக்கு பதில், கவரிங் நகை வைத்து மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருவாரூர் மாவட்டம், பாவட்டக்குடியில் கனரா வங்கி கிளை உள்ளது. இங்கு அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளுக்கு பதிலாக, கவரிங் நகைகளை மாற்றி வைத்து மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வங்கியின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், பொதுமக்கள், வங்கி ஊழியர்கள் பெயரில் போலி நகையை வங்கியில் அடகு வைத்து ரூ.2 கோடி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். நகை மதிப்பீட்டாளர் ஜெகதீசன் மீது திருவாரூர் குற்றவியல் போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்துள்ளார். நகைமதிப்பீட்டாளர் ஜெகதீஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications