திருமாவளவனை கொட்டிய தேனீ பாமக வளர்த்ததா?
சென்னை: திருமாவளவனை தேனீ கடிக்க காரணம் பாமகதான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தேனி கடித்த வலியை விட அதிகம் வலிக்கிறதாம் திருமாவளவனுக்கு. போஸ்டர் அடித்து ஓட்டியது யார் என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் திருமாவளவன்.
லோக்சபா தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.

இதற்காக செவ்வாய்கிழமையன்று திருமானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காலை 8 மணிக்கு பிரசாரத்தை வாரணவாசியில் தொடங்கிய அவர் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட கோயில் எசனை-வெங்கனூர் கிராமங்களுக்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தோப்பில் தோழமை கட்சியினருடன் அமர்ந்தார்.
அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அனைவரையும் துரத்த ஆரம்பித்தது. நெற்றியில் கொட்டிய தேனீ இதில் வேட்பாளர் திருமாவளவன் தனது வாகனத்தில் ஓடி வந்து ஏற முயன்றபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் துரத்தி வந்த தேனீ வேட்பாளரின் நெற்றியில் கொட்டியது. 22 பேருக்கு தேனீ கடி மேலும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரையும் துரத்த ஆரம்பித்த தேனீக்கள் திருமாவளவன் தம்பி செங்குட்டுவன், வெங்கனூரை சேர்ந்த கலியபெருமாள், திண்டிவனம் துரைராஜன் உள்ளிட்ட 22 பேரை கொட்டின.
இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் வெங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு மாத்திரை மருந்துகள் வழங்கபட்டன. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 5.30 மணியிலிருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications