நீட் வாபஸாகும் வரை... தமிழக ரயில் நிலையங்களில் குண்டுவெடிக்கும்... மர்ம கடிதத்தால் பரபரப்பு
நீட் தேர்வை திரும்ப பெறும் வரை தமிழக ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படும் என்று சென்னை ரயில் நிலைய அதிகாரிக்கு மர்ம கடிதம் வந்துள்ளது.
சென்னை: நீட் தேர்வை திரும்ப பெறும் வரை தமிழக ரயில் நிலையங்களில் மாதந்தோறும் குண்டு வெடிக்கும் என்ற கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு தகர்ந்து விடும் என்பதால் இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதை பொருட்படுத்தவில்லை.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்ற கருத்து வலுத்ததை அடுத்து சென்னை வந்திருந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்கு கோரி அவசர சட்டத்தை தாக்கல் செய்தால் அது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு மாணவர்கள் எதிர்ப்பு
இதைத் தொடர்ந்து தமிழக அரசும் அவசர சட்டத்தை இயற்றி மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதனிடையே நீட் ஆதரவு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அரியலூர் அனிதா
பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்ற அரியலூர் அனிதா என்ற கிராமப்புற ஏழை மாணவி நீட் தேர்வால் தனது மருத்துவ படிப்பு தகர்ந்துவிடும் என்று உச்சநீதிமன்றத்தில் நீட் ஆதரவு மாணவர்கள் தொடுத்த வழக்கில் எதிர்மனு தாராக இணைத்து கொண்டார். எனினும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ கவுன்சலிங் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அனிதா தற்கொலை
இந்நிலையில் மருத்துவ கனவு கலைக்கப்பட்டதால் மனமுடைந்த அனிதா கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி இன்று தமிழகம் முழுவதும் 5-ஆவது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மர்ம கடிதம்
இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாதந்தோறும் தமிழக ரயில் நிலையங்களில் குண்டுவெடிக்கும் என்று குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தில் வேறு தகவல்கள் ஏதும் இல்லை. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications