சென்னைக்கு விரையும் பாடப்புத்தகங்கள்- பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கை கொடுக்கும் மாணவர்கள்
நெல்லை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடபுத்தகங்கள் நெல்லையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணியில் மாணவர்களும் கை கோர்த்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வெளுத்து வாங்கி விட்டதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இந்த வெள்ளத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் பாட புத்தக்கங்களும் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை ஓய்து விட்டதால் பள்ளிகளை சீரமைத்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 14 ஆம்தேதி முதல் இந்த மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாடப்புத்தங்களை இழந்த மாணவர்களுக்கு புது பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. பிற மாவட்டங்களில் கூடுதலாக இருப்பில் உள்ள நோட்டுகள் பாடபுத்தகங்களை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி, சேரன்மகாதேவி கல்வி மாவட்டங்களில் மீதமிருந்த 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்கள் மற்றும் தொடக்க கல்வி துறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் லாரிகளில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் இந்த மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களும் தங்களிடம் இருக்கும் மீதமுள்ள கூடுதல் பாடப்புத்தகங்களை சக மாணவர்களுக்கு சென்னைக்கு அனுப்பி வருகின்றனர். மேலும் பழைய பாடப்புத்தகங்கள் இருந்தால் சேகரித்து அவற்றையும் படிப்பதற்காக சேகரித்து அனுப்பும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications