வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாட புத்தகங்கள் - வீட்டுக்கே அனுப்பி வைக்கும் தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழையால் பாட நூல்களை இழந்த மாணவர்களுக்கு, அவர்களின் வீட்டு முகவரிக்கே அவற்றைப் பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு, "கடுமையான வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக, பாடநூல்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

Books will send to students' home

சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் யாரேனும் பாடநூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணையதளத்தின் www.textbookcorp.in வழியாகப் பதிவு செய்து பிரதி எடுத்து, அவர்களின் வீட்டு முகவரிக்கே பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும். அதனை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இதுதவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரினால், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி இணையவழி சேவையைப் பயன்படுத்தி உடனுக்குடன் பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+