ஒரே நாளில் 4 தேர்வுகள்... குழப்பத்தில் பட்டதாரிகள்: குரூப்-2 தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஒரே நாளில் வருவதால், அதில் எத்தேர்வில் பங்கு கொள்வது என தேர்வுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் குரூப் 2 தேர்வை தள்ளிவைக்க அவர்கள் டி.என்.பி.எஸ்,சி.யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2011ம் ஆண்டு குரூப் 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்தியது. அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக அத்தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் 29ம் தேதி குரூப் -2 தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இந்த தேர்வில் சுமார் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், குரூப்-2 தேர்வு நடைபெறவுள்ள அதே நாளில், மேலும் 3 போட்டி தேர்வுகள் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய உளவுத்துறையின் (ஐ.பி) இளநிலை உளவு அதிகாரி பதவிக்கு நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் தான், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி பதவிக்கான தேர்வும், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெற உள்ளது.
இதனால், மேற்கூறிய நான்கு தேர்வுகளுக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். விண்ணப்பித்த நான்கு தேர்வுகளில் எதற்கு முக்கியத்துவம் தருவது என அவர்கள் சிந்தித்து வருகின்றனர்.
எனவே, குரூப்-2 தேர்வு தேதியை மட்டுமாவது தள்ளி வைக்கவேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு பட்டதாரிகள் பலர் கடிதம் வாயிலாகவும், நேரில் சென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications