நீலாங்கரை: பேருந்து மோதி குளத்தில் பாய்ந்த கார்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
சென்னை: நீலாங்கரை அருகே கார் குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள சின்ன நீலாங்கரை குப்பம் சிங்காரவேலன் சாலையில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மனைவி வெண்ணிலா. மகள்கள் ரம்யா, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டும், பவித்ரா நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பும் படித்து வந்தனர். பாண்டியன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
.நேற்று இரவு திருவான்மியூரில் உள்ள ஒரு தியேட்டரில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற பாண்டியன், படம் முடிந்து இரவு 1 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். சென்னை பல்கலைக்கழக குடியிருப்பு சிக்னல் அருகே கார் சென்றபோது, காரில் பெட்ரோல் குறைவாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து கொட்டிவாக்கம் குளம் அருகே உள்ள பங்க்கில் பெட்ரோல் நிரப்ப பாண்டியன் காரை திருப்பினார்.அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் காரின் பின்னால் மோதி நிற்காமல் சென்றது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி குளத்திற்குள் பாய்ந்தது. அதிர்ச்சி அடைந்த பாண்டியன் கார் கதவை திறந்து வெளியே வந்து விட்டார். கார் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரது மனைவி வெண்ணிலா, மகள்கள் ரம்யா, பவித்ரா ஆகியோரால் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை. அதற்குள் கார் தண்ணீருக்குள் முழுவதும் மூழ்கியது.
பாண்டியனின் அலறல் சத்தம் கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்களும், ரோந்து பணியில் இருந்த போலீசாரும் குளத்தில் குதித்து காருக்குள் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் கார் ஆழத்தில் மூழ்கியதால் அவர்களால் மீட்க முடியவில்லை. அதையடுத்து திருவான்மியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் இருந்த வெண்ணிலா, ரம்யா, பவித்ரா ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி இறந்து இருப்பது தெரிந்தது.
அவர்களது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications