அதிகாரிகளை மிரட்டிய புகார்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப் பதிவு

கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 16ம் தேதி திருமங்கலம் - விருதுநகர் மெயின் ரோட்டில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
விருதுநகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ராதா கிருஷ்ணனுக்கு ஆதரவாக செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியபோது, அதிகாரிகளைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். எந்த அதிகாரியாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். சில நாட்களுக்குத்தான் அதிகாரிகள். அதன்பிறகு அவர்கள் எங்கே இருப்பார்கள் என்று தெரியாது என்று பேசியதாக தெரிகிறது.
சம்பவம் நடந்த அன்று எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், தற்போது திருமங்கலம் நகர காவல்நிலையத்தில், தேர்தலின்போது பணிசெய்யவிடாமல் தடுத்ததாகவும், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைச்சர் ராஜேந்திரபாலஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பால்ராஜ், கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரிகளை மிரட்டி அன்று பேசியதற்கு வழக்கு பதிவு செய்யாமல் இவ்வளவு நாட்கள் கழித்து தேர்தல் நடந்து முடிந்து இத்தனை நாட்களுக்கு பிறகு வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஒரு கண் துடைப்பு நாடகமாகவே கருதப்படுகிறது என்று எதிர்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications