43வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை.. 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!
மேட்டூர்: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. வரலாற்றில் 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. மேற்கு மற்று கிழக்கு கால்வாயிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கொட்டி வருகிறது. ஒரு மாதமாக இடைவிடாமல் பெய்து வரும் மழையால் கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பிவிட்டன. இதனையடுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரானது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1,53,091 கன அடியாக இருந்தது. இது நேற்று மாலை 1,05,264 அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை நேற்று மாலை தாண்டியது. கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து நீடிக்கும் நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எந்த நேரத்திலும் எட்டக் கூடும் என்ற நிலை இருந்தது.
இதன் பின்னர் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90.34 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 20,000 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அதிகரிப்பால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது மேட்டூர் அணை. இதன் காரணமாக அணையின் உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோரத்தின் 11 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக இன்று நீர் திறந்துவிடப்பட்டது.
ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கால்வாய் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் முன்கூட்டியே கால்வாய் பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இன்று காலை வினாடிக்கு 200 கன அடிநீர் முதலில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் உபரி நீர் அப்படியே 16 கண் மதகுகள் வழியாக முழுமையாக வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கால்வாய் வழியாகவும் நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications