காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை: கர்நாடகா தண்ணீர் கொடுத்தே ஆகனும்.. பொன்.ராதாகிருஷ்ணன்
காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கன்னியாகுமரி: காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை கர்நாடகா கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தே ஆக வேண்டும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கர்நாடக நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கர்நாடகாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காவிரி வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை, தமிழகத்திற்கு கர்நாடகா வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என அவர் கூறினார். காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications