ஆக்செல் சன்ஷைன் சிவசங்கரன் மீது ரூ.600 கோடி வங்கி மோசடி புகார்.. சிபிஐ அதிரடி சோதனை
ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரன் மீது 600 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரன் மீது 600 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன். இவரக்கு ஆக்செல் சன்ஷைன் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளராக உள்ளார்.
இவர் ஐடிபிஐ வங்கியில் 600 கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து சிவசங்கரனுக்கு சொந்தமான 50 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

8 மணி நேரம் சோதனை
சென்னை, டெல்லி, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவசங்கரனின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் 8 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இரண்டு நிறுவனங்கள்
ஆக்செல் சன்ஷைன் நிறுவனம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வின்விண்ட் ஒய் என்ற நிறுவனம் பின்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2014ல் ஐடிபிஐயில் கடன்
சிவசங்கரனின் வின்விண்ட் ஒய் நிறுவனம் காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 2014ஆம் ஆண்டு ஐடிபிஐ வங்கியில் 530 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது.

சிபிஐ அதிகாரிகள் விசாரணை
தற்போது வட்டியுடன் 600 கோடியாக உயர்ந்துள்ளது. சிவசங்கரன் மீது குற்றசதி, மோசடி, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவசங்கரனிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications