தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு பல நூறு கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லி: தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 1-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளின் தரம் குறித்து அதிமுக எம்.பி லட்சுமணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய சுகாதார துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறுகையில் தமிழகத்திலுள்ள 4 மருத்துவ கல்லூரிகளை தரம் உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அவை தஞ்சை, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய மருத்துவமனைகள் ஆகும்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 120 கோடியும், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ரூ.125 கோடியும், சேலம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடியும், நெல்லை மருத்துவக் கல்லூரிக்குரூ. 120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் முறையே ரூ. 30 கோடியும், ரூ. 25 கோடியும், ரூ. 39 கோடியும், ரூ.30 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிரதமர் மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) என்ற திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த நிதியை கொண்டு மருத்துவ கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, பரிசோதனை கூடம், கருவிகள், மருத்துவ சாதனங்கள், அடிப்படை வசதிகள் ஆகியன மேம்படுத்தப்படும்.
நாடு முழுவதும் கடந்த 2016-ஆம் ஆண்டு 13 மருத்துவ கல்லூரிகள் தரம் உயர்த்துவதற்காக தேர்வு செய்யப்பட்டன. அதில் மாநில வாரியாக எந்தெந்த கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை மத்திய பொருளாதார விவகார குழு முடிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் 4 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படவுள்ளன.
இதுபோல் பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூிகளை தரம் உயர்த்துவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications