ஆதார் கட்டாயம் ஏன்? சொல்ல சொல்ல கேட்க மாட்டீங்களா... மத்திய அரசுக்கு குட்டு போட்ட சுப்ரீம் கோர்ட்
ஆதார் அட்டையை அரசின் நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்கியது ஏன் என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உத்தரவிட்டும் அதனை மீறியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் கட்டாய ஆதார் அட்டை கொள்கையை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது வருமான வரி தாக்கல் செய்ய ஆதாரை கட்டாயமாக்கியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ஆதாரை வருமான வரி தாக்கலில் கட்டாயமாக்கினால் மட்டுமே சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனையை தடுக்க முடியும் என்று தெரிவித்தது.
எனினும் ஆதார் எண்ணை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ள நிலையில் அதனை பின்பற்றாமல், மத்திய அரசு செயல்படுவது ஏன் என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேட்டனர்.
இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, ஏப்ரல் 26ம் தேதிக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனவே ஆதார் அட்டையை அரசின் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து அன்று இறுதி முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே வழங்கியுள்ள உத்தரவில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டம், ஓய்வூதிய திட்டங்கள், வங்கி கணக்கு திட்டங்கள் மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் போன்ற திட்டங்களுக்கு ஆதார் அட்டையின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications